பாகிஸ்தானில் போலீஸ் அலுவலகம் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 5 பேர் பலியானார்கள்.
பாகிஸ்தான், பலுசிஸ்தான் மாகாணத்தின் தென் மேற்கு பகுதியில் உள்ள குவெட்டா நகர் போலீஸ் அலுவலகம் அருகே இன்று காலை குண்டுவெடித்தது. இந்த சம்பத்தில் 5 பேர் பலியானார்கள். 13 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.