பாகிஸ்தானில் போலீஸ் அலுவலகம் அருகே குண்டுவெடிப்பு: 5 பேர் சாவு

பாகிஸ்தானில் போலீஸ் அலுவலகம் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 5 பேர் பலியானார்கள்.
பாகிஸ்தானில் போலீஸ் அலுவலகம் அருகே குண்டுவெடிப்பு: 5 பேர் சாவு

பாகிஸ்தானில் போலீஸ் அலுவலகம் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 5 பேர் பலியானார்கள்.

பாகிஸ்தான், பலுசிஸ்தான் மாகாணத்தின் தென் மேற்கு பகுதியில் உள்ள குவெட்டா நகர் போலீஸ் அலுவலகம் அருகே இன்று காலை குண்டுவெடித்தது. இந்த சம்பத்தில் 5 பேர் பலியானார்கள். 13 பேர் காயமடைந்தனர்.  அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com