காபூல்: ஆப்கானிஸ்தானின் ஹெரட் நகரில் இந்தியா கட்டி கொடுத்த சல்மா அணையின் அருகே தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 போலீஸார் உயிரிழந்தனர். 4 தலிபான் பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்கானிஸ்தானில் ஹெரட் நகரில் இந்தியா கட்டி கொடுத்த சல்மா அணை கடந்த ஆண்டு தான் தொடங்கப்பட்டது. அந்த அணையின் அருகே உள்ள சோதனை சாவடியில் நேற்று இரவு தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 10 போலீஸாரும், 4 பயங்கரவாதிகளும் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.
ரமலான் கொண்டாட உள்ளநிலையில், தலிபான் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என ஆப்கானிஸ்தான் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டு உள்ளது.
சமீப காலமாக ஆப்கானில் தலிபான் பயங்கரவாதிகளின் தாக்குதல் அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.