சீனா: நிலச்சரிவில் சிக்கி 6 பேர் பலி: 100 பேரைக் காணவில்லை

சீனாவில் சனிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 100 பேரைக் காணவில்லை.
சீனாவின் சிச்சுவான் மாகாணம் மவோக்ஸியன் மாவட்டத்தில் நடைபெறும் மீட்புப் பணிகள்.
சீனாவின் சிச்சுவான் மாகாணம் மவோக்ஸியன் மாவட்டத்தில் நடைபெறும் மீட்புப் பணிகள்.

சீனாவில் சனிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 100 பேரைக் காணவில்லை.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது: தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சனிக்கிழமை கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மவோக்ஸியன் மாவட்டத்தில் உள்ள அபகிட் ஜின்மோ கிராமத்தில் உள்ள 62 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன.
இடிபாடுகளிலிருந்து இதுவரையில் 6 பேரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், 100 பேர் மண்ணுக்குள் புதைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட மீட்புக் குழுவினர் இடிபாடுகளை அகற்றும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com