பாகிஸ்தானில் பெட்ரோல் ஏற்றிச் சென்ற லாரி வெடித்துச் சிதறியதில் பலியானோர் எண்ணிக்கை 160-ஆக அதிகரித்தது.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது: பெட்ரோல் லாரி வெடித்துச் சிதறியதில் பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் முல்தான், ஃபைசலாபாத், லாகூர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த ஒன்பது பேர் திங்கள்கிழமை உயிரிழந்தனர். இதில், நான்கு சிறுவர்களும் அடங்குவர்.
இதையடுத்து, இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 160-ஆக அதிகரித்தது.
மேலும், 60 சதவீதம் வரை தீக்காயமைடந்த 40 பேரின் உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருகின்றனர்.
விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சமும், காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சமும் உடனடியாக வழங்க பிரதமர் நவாஸ் ஷெரீஃப் உத்தரவிட்டார்.