நேபாளத்தில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 26 பேர் பலி! 

நேபாளத்தின் வடக்கு மாவட்டமான ஜாஜார்க்கட்டில் நேற்று இரவு பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 26 பேர் பலியானார்கள்.
நேபாளத்தில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 26 பேர் பலி! 

காத்மாண்டு: நேபாளத்தின் வடக்கு மாவட்டமான ஜாஜார்க்கட்டில் நேற்று இரவு பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 26 பேர் பலியானார்கள்.

நேபாளத்தின் வடக்கு மாவட்டமான ஜாஜார்க்கட்டில் உள்ள கலாங்கா என்ற கிராமத்தில் இருந்து காரா என்ற கிராமத்தை நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. சிஞ்சு -ஜஜார்காட் நெடுஞ்சாலை அருகே அந்த  பேருந்து சென்று கொண்டிருந்த பொழுது எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குளானது.

இந்த விபத்தில் 15 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 11 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி பலியானார்கள். படுகாயமடைந்த மூன்று பேர் அபாய கட்டத்தில் உள்ளார்கள்.

இந்த தகவல்களை ஜாஜார்க்கட் மாவட்ட தலைமை அலுவலர் கிருஷ்ண சந்திர பொதுல் தெரிவித்தாக காத்மாண்ட் போஸ்ட் என்னும் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com