பாகிஸ்தான்: பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 போலீஸார் பலி

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 4 போலீஸார் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 4 போலீஸார் உயிரிழந்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது: கைபர் பக்துன்குவா மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. கோஹட் மாவட்டம் கமால்கேல் பகுதியில் பணியை முடித்துவிட்டு போலீஸார் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது வழியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் போலீஸார் வந்த வாகனங்களை நோக்கி சராமரியாக துப்பாக்கிச் சூடு நிகழ்த்தினர். போலீஸாரும் பதில் தாக்குதல் நிகழ்த்தினர். இதையடுத்து, பயங்கரவாதிகள் தப்பிச் சென்றனர். பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு 4 போலீஸார் உயிரிழந்தனர் என்று தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com