பதான்கோட்: பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தளம் அருகே மர்ம பை சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அந்த மர்ம பையில் 3 ராணுவ உடைகள் இருந்ததாக தெரிய வந்துள்ளது. மர்ம பையை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து பஞ்சாப் போலீஸ் மற்றும் ராணுவ வீரர்கள் அப்பகுதியில் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பதான்கோட் விமான தளத்திற்கு வெளியே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏரளமான ராணுவ வாகனங்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளன.