நூலிழையில் உயிர் தப்பிய சிறுமிகள்: இதனை அதிர்ஷ்டம் என்று மட்டும் சொல்லிவிட முடியாது

நார்வேயில் சாலையைக் கடக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நூலிழையில் உயிர் தப்பிய விடியோ வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
நூலிழையில் உயிர் தப்பிய சிறுமிகள்: இதனை அதிர்ஷ்டம் என்று மட்டும் சொல்லிவிட முடியாது


நார்வே: நார்வேயில் சாலையைக் கடக்க முயன்ற இரண்டு சிறுமிகள் நூலிழையில் உயிர் தப்பிய விடியோ வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

வாகனம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த டேஷ் கேமராவில் இந்த விடியோ காட்சி பதிவாகியுள்ளது. சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இதனை நார்வே காவல்துறையினர்  வெளியிட்டுள்ளனர்.

பள்ளியின் பேருந்தில் இருந்து இறங்கும் சிறார்கள், பள்ளிப் பேருந்து கிளம்பும் முன்பே, அதன் பின் பகுதியில் இருந்து சாலையைக் கடக்க முயற்சிக்கிறார்கள். இவர்களுக்கு எதிர் திசையில் இருந்து என்ன வந்து கொண்டிருக்கிறது என்பது தெரியாது.

அப்போது கண் இமைக்கும் நேரத்தில் எதிர் திசையில் இருந்த வேகமாக வந்த டிரக்கும், சிறுவர்களும் மிக நெருக்கத்தில் சந்திக்க, ஒரு சிறுவன், பின் பக்கம் ஓடி தப்பிக்க, மற்றொரு சிறாரின் நிலைமை ஒரு சில நொடிகளில் முடிந்து போகுமோ என்று மனது துடிக்கும் போது, டிரக் ஓட்டுநர் அசாத்தியமான முறையில் பிரேக் பிடித்து வண்டியை நிறுத்துகிறார்.
 

வாகனமும் எதிர்பாராத ஒரு பிரேக்கினால் குலுங்கு குலுங்கி நிற்கிறது. இதில் அந்த சிறாரின் சாமர்த்தியத்தையும் நிச்சயம் குறிப்பிட்டாக வேண்டும். ஒரு நொடியும் யோசிக்காமல், வலது பக்கமாக திரும்பி ஓடாமல் இருந்திருந்தால், பிரேக்குக்கும், வாகனத்தின் வேகத்துக்கும் இடைப்பட்ட அந்த நொடிகளில் எல்லாம் முடிந்திருக்கும்.

வலைத்தளங்களில் இந்த விடியோ வேகமாகப் பரவி வருகிறது. இந்த விடியோவைப் பார்ப்பவர்கள், அந்த குழந்தை தப்பியது வெறும் அதிர்ஷ்டம் மட்டுமே என்று சொல்ல மாட்டார்கள் நிச்சயமாக.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com