இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், தெரிக்-இ-இன்சாப் கட்சியின் நிறுவனருமான இம்ரான் கானுக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் இம்ரான் கான். இவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்பு 'தெரிக்-இ-இன்சாப்' என்ற அரசியல் கட்சி ஒன்றினை துவக்கி தீவிர அரசியலில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் அவருக்கு அந்நாட்டு தேர்தல் ஆணையம் ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. 'தெரிக்-இ-இன்சாப்' கட்சியின் ஆரம்ப கட்டத் தலைவர்களில் ஒருவரும், சமீபத்தில் அக்கட்சியில் இருந்து வெளியேறியவருமான பாபர் என்பவர் தொடுத்த வழக்கில்தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவினை எதிர்த்து இஸ்லாமாபாத் உயர் நீதின்றத்தில் முறையிடப் போவதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.