வியத்நாமில் மழைவெள்ளம்: பலி எண்ணிக்கை 54-ஆக உயர்வு

வியத்நாமில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 54-ஆக அதிகரித்தது.

வியத்நாமில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 54-ஆக அதிகரித்தது.
வியத்நாமின் மத்திய மற்றும் வடக்குப் பகுதிகளில் புயல் தாக்கியதையடுத்து, கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்குள்ளானது.
வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போதைய நிலையில் 54-ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 31-ஆக உள்ளது. காணாமல் போன 39 பேரைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். 
மழை வெள்ளத்தால், 30,000 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும், அடிப்படை கட்டமைப்பு வசதிகள், பயிர்கள், கால்நடைகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் வியத்நாமின் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com