ஆப்கானிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் இஸ்லாமிய தேச பயங்கரவாத (ஐ.எஸ்.) அமைப்பைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து ஆப்கன் அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்ததாவது:
ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்தில் உள்ள சாவ்கே மாவட்டத்தில் அமெரிக்க ஆளில்லா விமானங்கள் குண்டு வீசி தாக்குதலை நிகழ்த்தின.
அந்த தாக்குதலில் பயங்கரவாத செயல்களை நிறைவேற்ற திட்டம் வகுத்துக் கொண்டிருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் 14 பேர் உயிரிழந்தனர். இதனை ஆப்கன் பாதுகாப்புத் துறை அமைச்சகமும் உறுதி செய்தது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
இருப்பினும், ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை இந்த தாக்குதல் குறித்து உடனடியாக கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.