சவூதி தீ விபத்தில் 10 பேர் பலி

சவூதியில் தச்சு தொழிற்கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர்.

சவூதியில் தச்சு தொழிற்கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து போலீஸார் தெரிவித்ததாவது:
தலைநகர் ரியாதில் உள்ள பதர் மாவட்டத்தில் உள்ள தச்சுத் தொழிற்கூடத்தில் சனிக்கிழமை இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, தொழிற்கூடம் முழுவதும் மளமளவென பரவிய அந்த தீயில் சிக்கி பணியாளர்கள் 10 பேர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
தீ விபத்து குறித்து உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். 
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசராணை நடத்தப்பட்டு வருகிறது என்று போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com