ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானில் அமைதி காப்புப் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய ராணுவ வீரர்கள் 50 பேருக்கு அவர்களின் சிறப்பான பணி மற்றும் அப்பாவி மக்களைக் காப்பாற்றுவதில் ஆற்றிய சேவை ஆகியவற்றுக்காக ஐ.நா. பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட தெற்கு சூடானில் அமைதிப் பணியாற்றி வரும் ஐ.நா. படையின் ஒரு பகுதியாக இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அந்நாட்டின் ஜோங்க்ளி மாகாணத்தில் உள்ள போர் பகுதியில் இந்தியப் படையினர் நிலைகொண்டுள்ளனர்.
இந்நிலையில், இந்திய ராணுவ வீரர்கள் 50 பேருக்கு அவர்களின் சிறப்பான பணி மற்றும் அப்பாவி மக்களைக் காப்பாற்றுவதில் ஆற்றும் சேவை ஆகியவற்றுக்காக ஐ.நா. பதக்கம் வழங்கப்பட்டது.
அவர்களுக்கு ஐ.நா. அமைதி காப்புப் படையின் தளபதியான ஃபிராங்க் முஷ்யோ கமான்சி இப்பதக்கங்களை
வழங்கினார்.