லண்டனில் நவாஸின் சொத்து குறித்து விசாரணை

பிரிட்டனில் நவாஸ் ஷெரீஃப் பெயரில் உள்ள சொத்துகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக பாகிஸ்தானின் ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள் லண் டன் வந்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
லண்டனில் நவாஸின் சொத்து குறித்து விசாரணை

பிரிட்டனில் நவாஸ் ஷெரீஃப் பெயரில் உள்ள சொத்துகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக பாகிஸ்தானின் ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள் லண் டன் வந்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நவாஸ் ஷெரீஃப் குடும்பத்தினருக்கு பிரிட்டனில் உள்ள சொத்துகளின் விவரங்களை சேகரிக்கவும், ஊழல் வழக்கு தொடர்பாக சாட்சியங்கள் சேகரிக்கவும் அந்த அதிகாரிகள் பிரிட்டன் வந்துள்ளனர் என்று டான் நாளிதழ் உள்ளிட்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னதாக, தங்கள் வருகையை பிரிட்டன் அரசுக்கு பாகிஸ்தான் ஊழல் தடுப்பு ஆணையம் தெரியப்படுத்தியிருந்தது. நவாஸ் ஷெரீஃப் மற்றும் அவர் குடும்பத்தினர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பிரிட்டனில் நடைபெறும் விசாரணைக்கு பிரிட்டன் அரசு உதவியும் ஒத்துழைப்பும் அளிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com