ஜப்பானில் பிரதமர் தேர்தல் நடைபெறுகிறது. இன்று காலை 7 மணியளவில் வாக்கு பதிவு தொடங்கி இரவு 8 மணியளவில் முடிவடையும்.
வாக்குப்பதிவு நேரத்தில் ஒரு சக்திவாய்ந்த சூறாவளி ஜப்பான் நோக்கி நகர்ந்துள்ளது, கடுமையான மழை காரணமாக வாக்குப்பதிவு தாமதப்பட்டுள்ளது. எனினும் வாக்களார்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.
ஜப்பானின் மிக சக்தி வாய்ந்த கீழவையில் உள்ள 465 இடங்களுக்கு ஏறக்குறைய 1,200 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதிகாரபூர்வ முடிவு இன்று இரவு வெளியாகும்.
இந்த தேர்தலில் மீண்டும் அபே தேர்வு செய்யப்பட்டால் உலக போருக்கு பின் நீண்ட காலம் பதவி வகிக்கும் பிரதமர் என்ற பெருமையை அவர் பெறுவார்.