மைடுகிரி: நைஜீரியாவின் மைடுகிரியில் தற்கோலைப்படையினர் நடத்திய இரட்டை குண்டுவெடிப்பில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
போகோ ஹாரம் கிளர்ச்சியாளர்களாக சந்தேகிக்கப்படும் மூன்று தற்கொலைப்படை பயங்கரவாதிகள் பல்வேறு இடங்களில் இரட்டை குண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதில், அப்பாவி பொதுமக்கள் 13 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்ததாகவும், மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக அனடோலு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
முதல் குண்டு வெடிப்பு மூனா கேரேஜ் பேருந்து நிலையத்தில் ஏற்பட்டது. ஒரு சில மீட்டர் தூரத்தில் உள்ள மூனா டால்டிவில் என்ற இடத்தில். மற்றொன்று குண்டு வெடித்தது.