மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவின் தெற்குப் பகுதியில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 8 ஆக பதிவாகியுள்ளது.
பயங்கர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மெக்சிகோ கடற்பகுதிகளில் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.
சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் மெக்சிகோ கடற்பகுதிகளில் சுனாமி அலைகள் தாக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.