இராக்கில் ஐ.எஸ். இரட்டைத் தாக்குதல்: 52 பேர் பலி

இராக்கில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் வியாழக்கிழமை நிகழ்த்திய இரட்டை கார்வெடிகுண்டுத் தாக்குதலில் ஈரானியர் உள்பட 52 பேர் உயிரிழந்தனர்.

இராக்கில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் வியாழக்கிழமை நிகழ்த்திய இரட்டை கார்வெடிகுண்டுத் தாக்குதலில் ஈரானியர் உள்பட 52 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:
தெற்கு இராக்கின் திகார் மாகாணத்தின் நஸ்ரியா பகுதியில் உள்ள உணவகத்தில் பயங்கரவாதிகள் இந்த கார் வெடிகுண்டுத் தாக்குதலை வியாழக்கிழமை நிகழ்த்தினர். சிறிது நேரத்தில், அதே பகுதியில் உள்ள பாதுகாப்பு படையினரின் சோதனைச் சாவடியை குறிவைத்து மற்றொரு கார் வெடிகுண்டுத் தாக்குதலும் நிகழ்த்தப்பட்டது. இந்த இரு தாக்குதல்களில், ஈரான் நாட்டைச் சேர்ந்தவர்கள் உள்பட 52 பேர் உயிரிழந்தனர். மேலும், 91 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த கார் வெடிகுண்டுத் தாக்குதலுக்கு இஸ்லாமிய தேச பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com