மெக்ஸிகோவின் தலைநகர் மற்றும் இதரப் பகுதிகளில் செவ்வாய்கிழமை 7.1 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
அமெரிக்க நிலநடுக்க ஆய்வு மையத்தின் அறிவிப்பின் படி சான் ஜுவான் ரபோஸோ நகரில் 4.5 கிலோ மீட்டர் நீளத்துக்கும் பியூப்லா நகரில் 55 கிலோ மீட்டர் தூரத்துக்கும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அதுபோல மெக்ஸிகோவின் தலைநகரான மெக்ஸிகோ சிட்டி மையப்பகுதியில் இருந்து 121 கிலோ மீட்டர் தூரத்துக்கு நிலநடுக்க பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
பூமிக்கு அடியில் சுமார் 51 கிலோ மீட்டர் ஆழத்துக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் உயர்ந்த கட்டிடங்கள் அனைத்தும் தரைமட்டம் ஆனாது.
இந்நிலையில், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.