காபூலில் பள்ளி வகுப்பறையில் புதன்கிழமை நடைபெற்ற தற்கொலைப் படை தாக்குதலில் 48 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் காபுல் நகரத்தின் அருகில் செயல்பட்டு வரும் தனியார் கல்வி மையத்தில் உள்ள வகுப்பறையில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில், குண்டு வெடிப்பில் சிக்கி 48 பேர் உயிரிழந்தனர். மேலும் 67 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி பெற்று வரும் மாணவர்கள் இருந்த வகுப்பறையை குறிவைத்து இந்த தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் உயிரிழந்தவர்கள் 18 வயதுக்கும் குறைவானவர்களாக இருக்க வாய்ப்புள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த தற்கொலைப் படை தாக்குதல் சம்பவத்தில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.