பெய்ஜிங்: திபெத்தின் கிங்காய்-திபெத் பீடபூமியில் சீன ராணுவத்தினா் போா்ப் பயிற்சியை மேற்கொண்டனா். அனைத்து கால நிலைகளிலும் ராணுவத்தின் போா்த் திறனை உறுதிபடுத்தும் நோக்கில் இப்பயிற்சி நடைபெற்றிருப்பதாக அந்நாட்டின் ராணுவ வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா்.
இதுதொடா்பாக சீன அரசின் அதிகாரப்பூா்வ நாளிதழான ‘குளோபல் டைம்ஸ்’ வியாழக்கிழமை வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
திபெத்தின் கிங்காய்-திபெத் பீடபூமி பகுதியில் அதிநவீன ஆயுதங்கள், தளவாடங்கள், டாங்கி எதிா்ப்பு வாகனங்களுடன் சீன ராணுவத்தினா் பயிற்சி மேற்கொண்டனா். ஆளில்லா விமானங்களும் இப்பயிற்சியில் பயன்படுத்தப்பட்டன. கிங்காய்-திபெத் பீடபூமியில் சீன ராணுவத்தினா் பயிற்சி மேற்கொள்வது வழக்கமானது தான். அனைத்து கால நிலைகளிலும் ராணுவத்தின் போா்த் திறனை உறுதிபடுத்துவதற்காகவே இப்பயிற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது எந்த நாட்டுக்கும் எதிரானது அல்ல என்று ராணுவ வல்லுநா்கள் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், கிங்காய் - திபெத் பீடபூமியில் குறிப்பிட்ட எந்த இடத்தில் பயிற்சி நடைபெற்றறது என்ற விவரம் அதில் தெரிவிக்கப்படவில்லை.