செய்தித் துளிகள்...

கென்யாவின் வடகிழக்கிலுள்ள வாஜிர் மாவட்டப் பள்ளியில், அல்-ஷபாப் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 3 ஆசிரியர்கள் பலியாகினர்.
செய்தித் துளிகள்...

1. கென்யா

கென்யாவின் வடகிழக்கிலுள்ள வாஜிர் மாவட்டப் பள்ளியில், அல்-ஷபாப் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 3 ஆசிரியர்கள் பலியாகினர்.

2. சீனா

சீனாவில் பட்டாசுக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், அந்த நாட்டுக்கான புத்தாண்டு வெடி முழக்கங்களின்றி வெள்ளிக்கிழமை அமைதியாகக் கொண்டாடப்பட்டது.

3. பிரேசில்

அரசியல் பதற்றம் நிலவி வரும் அண்டை நாடான வெனிசூலாவிலிருந்து அகதிகள் வருவது அதிகரித்துள்ளதால், பிரேசில் தனது எல்லையில் நெருக்கடி நிலை அறிவித்துள்ளது.

4. சிரியா

சிரியாவில் போட்டி மத பயங்கரவாதக் குழுக்களிடையே நடைபெற்ற சண்டையில் ஹயத் தஹ்ரீர் அல்-ஷாம் அமைப்பின் முக்கிய தளபதி அபு அய்மான் அல்-மாஸ்ரி கொல்லப்பட்டார்.

5. ஆப்கன்

ஆப்கானிஸ்தானில் போர்க் குற்றங்கள் குறித்து விசாரித்து வரும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் இதுவரை 11.7 லட்சம் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

6. கிர்கிஸ்தான்

முன்னாள் சோவியத் யூனியன் நாடான கிர்கிஸ்தானில், கடுமையான பனிப் பொழிவு காரணமாக அந்த நாட்டுத் தலைநகர் பிஷ்கெக்கிலுள்ள சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது.

7. லிதுவேனியா

ஐரோப்பாவின் வட கிழக்கே, பால்டிக் நிலப்பரப்பில் அமைந்துள்ள லிதுவேனியா நாடு, தனது 100-ஆவது சுதந்திர தினத்தை வெள்ளிக்கிழமை கொண்டாடியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com