உலகின் தலைசிறந்த காவல் துறையான பிரிட்டனின் ஸ்காட்லாந்து யார்டு போலீஸின் பயங்கரவாத எதிர்ப்புப் படையின் தலைவர் பதவிக்கான போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அதிகாரி நீல் பாசு உள்ளார்.
இப்போது அவர் ஸ்காட்லாந்து யார்டு துணை ஆணையராகவும், பிரிட்டனின் பயங்கரவாத எதிர்ப்புப் படையின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்.
ஸ்கார்ட்லாந்து யார்டு பயங்கரவாத எதிர்ப்புப் படையின் தலைவராக இருக்கும் மார்க் ரெüலி, விரைவில் ஓய்வு பெறுகிறார். எனவே, அவருக்கு அடுத்த நிலையில் உள்ள நீல் பாசுவுக்கு தலைமைப் பொறுப்பு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.
நீல் பாசுவின் தந்தை இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு குடிபெயர்ந்தவர் ஆவார். பிரிட்டனில் இருந்து ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்தவர்களுக்கு எதிராக நீல் பாசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதன் மூலம் அவர் பிரிட்டனில் பிரபலமடைந்தார்.
ஸ்காட்லாந்து யார்டு போலீஸில் உயர் பதவிகளில் உள்ள ஹீலியன் பால், டேவ் தாம்ஸன் ஆகியோரும் நீல் பாசுவுடன் பயங்கரவாத எதிர்ப்புப் படையின் தலைவர் பதவிக்கான போட்டியில் உள்ளனர்.