சிரியாவில் முற்றுகை: துருக்கி அறிவிப்பு

சிரியாவில் குர்து படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள அஃப்ரின் நகரை முற்றுகையிடவிருப்பதாக துருக்கி அறிவித்துள்ளது.
சிரியாவில் முற்றுகை: துருக்கி அறிவிப்பு

சிரியாவில் குர்து படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள அஃப்ரின் நகரை முற்றுகையிடவிருப்பதாக துருக்கி அறிவித்துள்ளது.
இதுகுறித்து துருக்கி அதிபர் எர்டோகன் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ''இனி வரும் நாள்களில், சிரியாவிலுள்ள அஃப்ரின் நகரை எங்களது படைகள் முற்றுகையிடும்'' என்று கூறினார்.
சிரியாவில் உள்ள குர்து படையினர் மீது துருக்கி ராணுவம் தாக்குதல் நிகழ்த்தத் தொடங்கிய ஒரு மாதம் ஒரு மாதம் முடிவடைந்த நிலையில் அவர் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தங்களது நாட்டில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு வரும் குர்து அமைப்பினருக்கு, சிரியாவிலுள்ள ஒய்பிஜி குர்துப் படையினர் ஆதரவளிப்பதாக துருக்கி குற்றம் சாட்டி வருகிறது.
இதன் காரணமாக, சிரியாவிலுள்ள குர்துப் படையினர் மீது அந்த நாட்டுக் கிளர்ச்சியாளர்களின் உதவியுடன் தரைவழி மற்றும் வான்வழித் தாக்குதல்களை துருக்கி நடத்தி வருகிறது.
இந்த விவகாரம், அமெரிக்காவுக்கும், துருக்கிக்கும் இடையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில், துருக்கி அதிபர் எர்டோகன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com