ஜப்பான் ஏரியில் எரிபொருள் கொட்டிய அமெரிக்க போர் விமானம்

ஜப்பானில் பறந்து கொண்டிருந்த அமெரிக்க போர் விமானம், மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஏரியில் எரிபொருள் தொட்டிகளைக் கொட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பானில் பறந்து கொண்டிருந்த அமெரிக்க போர் விமானம், மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஏரியில் எரிபொருள் தொட்டிகளைக் கொட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த நாட்டின் ஆவ்மோரி பகுதியிலுள்ள ஒகாவாரா ஏரி வழியாக அமெரிக்க எஃப்-16 போர் விமானம் செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தபோது, அதன் என்ஜினில் தீப்பற்றியதாகவும், இதனால் விமானம் வெடித்துச் சிதறுவதைத் தவிர்ப்பதற்காக அதிலிருந்து எரிபொருள் நிரப்பப்பட்ட தொட்டிகளை ஏரியில் கொட்டியதாகவும் விமானிகள் தெரிவித்துள்ளனர்.
ஜப்பானில் அமெரிக்கப் பாதுகாப்புப் படைகள் நிலை கொண்டிருப்பது குறித்து ஏற்கெனவே விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், இந்தச் சம்பவம் அந்த சர்ச்சையே மேலும் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com