வாடகைத் தாய்கள் மூலம் 13 குழந்தைகள்: ஜப்பானியருக்கு தாய்லாந்து நீதிமன்றம் அனுமதி

தாய்லாந்தில் வாடகைத் தாய்கள் மூலம் பெற்ற 13 குழந்தைகளையும் வளர்க்க, ஜப்பானியருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

தாய்லாந்தில் வாடகைத் தாய்கள் மூலம் பெற்ற 13 குழந்தைகளையும் வளர்க்க, ஜப்பானியருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ஜப்பானைச் சேர்ந்த பெரும் செல்வந்தரான மிட்சுடோகி (28), தனது சொத்துகளை அனுபவிப்பதற்காக ஏராளமான குழந்தைகளைப் பெற விரும்பியதாகவும், அதன் காரணமாக தாய்லாந்துக்கு வந்து 13 வாடகைத் தாய்கள் மூலம் தனது குழந்தைகளைப் பெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், ஒரே நேரத்தில் இத்தனை குழந்தைகளைப் பெற்றுச் செல்வதற்கு தன்னார்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 
இது தொடர்பாகத் தொடுக்கப்பட்ட வழக்கிலேயே நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com