சவூதி அரேபியா மீது ஏவுகணைத் தாக்குதல் நிகழ்த்தியதாக யேமன் கிளர்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
சவூதியின் தாக்குதல் ஹெலிகாப்டர் மையத்தில் அமைந்துள்ள சிறப்புப் படையினரின் முகாமைக் குறிவைத்து அந்தத் தாக்குதல் வியாழக்கிழமை நிகழ்த்தப்பட்டதாகவும், அந்தத் தாக்குதலுக்கு காஹெர் 2-எம் ரக ஏவுகணை பயன்படுத்தப்பட்டதாகவும் ஹூதி கிளர்ச்சியாளர்களின் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
யேமனில் அரசுப் படைகளுக்கும், ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடைபெற்று வரும் சண்டையில், அரசுப் படையினருக்கு ஆதரவாக ஈரான் வான்வழித் தாக்குதல் நிகழ்த்தி வருகிறது.