இந்தியச் சிறுமி மரணம்: வளர்ப்புத் தந்தை மீது கொலை வழக்குப் பதிவு

அமெரிக்காவில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்ட இந்தியச் சிறுமியின் வளர்ப்புத் தந்தை மீது அந்த நாட்டு நீதிமன்றம் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்தியச் சிறுமி மரணம்: வளர்ப்புத் தந்தை மீது கொலை வழக்குப் பதிவு

அமெரிக்காவில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்ட இந்தியச் சிறுமியின் வளர்ப்புத் தந்தை மீது அந்த நாட்டு நீதிமன்றம் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளது.
அமெரிக்காவின் டல்லாஸ் மாகாணத்தில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வெஸ்லி மேத்யூஸ் (37), இந்தியாவிலிருந்து ஷெரீன் (3) என்ற சிறுமியை தத்தெடுத்து வளர்த்து வந்தார். இநத் நிலையில், கடந்த அக்டோபர் மாதம் அந்தச் சிறுமி காணாமல் போனதாக அவர் புகார் அளித்ததைத் தொடர்ந்து, அந்தச் சிறுமி அருகிலுள்ள ஒரு கால்வாய்க் குழியில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, ஷெரீன் பால் குடிக்கும்போது தொண்டையில் சிக்கி உயிரிழந்ததாகவும், அவரது உடலை அப்புறப்படுத்தியதாகவும் மேத்யூஸ் ஒப்புக்கொண்டார்.
இந்த நிலையில், அவர் மீது டல்லாஸ் நீதிமன்றம் கொலை வழக்குப் பதிவு செய்தது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், வெஸ்லி மேத்யூஸூக்கு மரண தம்டனை வரை விதிக்க முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com