ஈராக்கில் இரட்டை குண்டுவெடிப்பு: 26 பேர் உயிரிழப்பு 

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 
ஈராக்கில் இரட்டை குண்டுவெடிப்பு: 26 பேர் உயிரிழப்பு 

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

ஈராக்கின் மத்திய பாக்தாத் ஏடன் சதுக்கத்தில் உள்ள பாதுகாப்புச் சோதனைத் சாவடியை குறிவைத்து பயங்கரவாதிகள் இன்று இரட்டை வெடிகுண்டு தாக்குதலை நிகழ்த்தினர். இந்த சம்பவத்தில் 26 பேர் உயிரிழந்தனர்.

90 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கவரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. 

இருப்பினும், இந்த தாக்குதலை ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு நிகழ்த்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஈராக்கில் கடந்த மூன்று நாட்களில் நிகழ்த்தப்படும் மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com