காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ராணுவ பயிற்சி மையம் ஒன்றில் திங்கள் அதிகாலை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 11 ராணுவ வீரர்கள் பலியாகினர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ராணுவ பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் திங்களன்று அதிகாலை ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகள் 'திடீர்' தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலில் 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த தாக்குதலில் காயம் அடைந்த 16 வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தாக்குதல் நடத்திய ஐந்து பயங்கரவாதிகளில் நால்வர் கொல்லப்பட்டனர். ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றுள்ளதாக பின்னர் தகவல்கள் வெளியாகியுள்ளது
இந்த தகவல்களை ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சக செய்தி தொடர்பாளரை மேற்கோள் காட்டி பிபிசி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.