பாகிஸ்தானில் பிரசாரக் கூட்டத்தில் தற்கொலைப் படை தாக்குதல்: 13 பேர் பலி

பாகிஸ்தானில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் நடைபெற்ற தற்கொலைப் படை தாக்குதலில் தாக்குதலில் அவாமி தேசிய கட்சியின் மூத்த தலைவர்கொல்லப்பட்டார். 
பாகிஸ்தானில் பிரசாரக் கூட்டத்தில் தற்கொலைப் படை தாக்குதல்: 13 பேர் பலி

பாகிஸ்தானில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் நடைபெற்ற தற்கொலைப் படை தாக்குதலில் தாக்குதலில் அவாமி தேசிய கட்சியின் மூத்த தலைவர் கொல்லப்பட்டார். 

பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு வரும் 25ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சித் தலைவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் அவாமி தேசியக் கட்சியின் பொதுக் கூட்டம் பெஷாவர் நகரில் நேற்று நடைபெற்றது. 

அப்போது கூட்டத்தில் இருந்த தற்கொலைப் படை பயங்கரவாதி தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். இந்த தாக்குதலில் அவாமி தேசிய கட்சியின் மூத்த தலைவர் ஹாரூன் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்த நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com