பாகிஸ்தான்: நவாஸின் மனு தள்ளுபடி

தன் மீதான இரு பனாமா ஊழல் வழக்குகளை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் மனுவை அந்த நாட்டு ஊழல் தடுப்பு நீதிமன்றம்
பாகிஸ்தான்: நவாஸின் மனு தள்ளுபடி


தன் மீதான இரு பனாமா ஊழல் வழக்குகளை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் மனுவை அந்த நாட்டு ஊழல் தடுப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.
லண்டனில் குடியிருப்பு வாங்கியது தொடர்பான ஊழல் வழக்கில், நவாஸ் ஷெரீஃபுக்கு 10 ஆண்டுகளும், அவரது மகள் மரியமுக்கு 7 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்து இஸ்லாமாபாதிலுள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த நிலையில், பனமா முறைகேடு தொடர்பாக தன் மீது நடந்து வரும் மேலும் இரு ஊழல் வழக்குககளை வேறு ஊழல் தடுப்பு நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு தற்போது லண்டனில் வசித்து வரும் நவாஸ் ஷெரீஃப் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவை நீதிபதிகள் நிராகரித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com