அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை பிரிட்டன் வந்தடைந்தார். அந்த நாட்டில் 4 நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் அவர், பிரதமர் தெரசா மே, அரசி எலிசபெத் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திவிருக்கிறார்.
ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் பிரிவதற்கான பிரெக்ஸிட் நடவடிக்கைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், அதற்குப் பிந்தைய இரு நாட்டு உறவுகள் குறித்து அவர் விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிபராகப் பொறுப்பேற்றதற்குப் பிறகு டிரம்ப் பிரிட்டன் செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.