கிழக்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த எரித்ரியா, தனது அண்டை நாடான எத்தியோப்பியாவில் 20 ஆண்டுகள் கழித்து முதல் முறையாக தனது தூதரகத்தை செவ்வாய்க்கிழமை திறந்தது.
பெரும் பகை நாடுகளாக இருந்து வந்த இந்த இரு நாடுகளும், தங்களுக்கிடையே பல ஆண்டுகளாக நீடித்து வந்த கருத்து வேறுபாடுகளை முடித்துக் கொள்வதாக அண்மையில் அறிவித்தன. அதன் ஒரு பகுதியாக, தற்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.