துருக்கியில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்குப் பிறகு அந்த நாட்டில் அமல்படுத்தப்பட்டிருந்த 2 ஆண்டு கால நெருக்கடி நிலை, வியாழக்கிழமையுடன் முடிவுக்கு வந்தது. நெருக்கடி நிலை விலக்கிக்கொள்ளப்பட்டாலும், அதிபர் எர்டோகனின் அரசுக்கு எதிரானவர்கள் மீதான கெடுபிடிகள் தொடரும் என்று கூறப்படுகிறது.