கென்யாவில், கருத்து வேறுபாடு காரணமாக ஆண் நண்பரை 25 முறை கத்தியால் குத்திக் கொன்ற ரூத் கமாண்டே என்ற பெண்ணுக்கு, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறைக் கைதிகளுக்கான அழகி போட்டியில் பட்டம் வென்றவரான இவருக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனை, அந்த நாட்டின் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலுக்கு எதிரானது என்று சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.