சிரியாவில், இஸ்ரேலால் இணைக்கப்பட்டுள்ள கொலான் எல்லையையொட்டிய குனெய்த்ரா மாகாணத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்த மதவாதக் கிளர்ச்சியாளர்கள், அரசுப் படையினருடன் மேற்கொண்ட ஒப்பத்தத்தின் அடிப்படையில் அந்த மாகாணத்தைவிட்டு கூட்டம் கூட்டமாக வெளியேறத் தொடங்கினர். இந்த மாகாணத்தில் அரசுப் படைகள் தொடர்ந்து மேற்கொண்டு வந்த தாக்குதலைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.