இந்தியாவையொட்டிய திபெத் பகுதியில், சீன சிறப்பு ராணுவப் படையினர் இரண்டாவது முறையாக போர் ஒத்திகையில் ஈடுபட்டனர். இந்தியாவுடன் போர் ஏற்பட்டு, இந்திய ராணுவம் திபெத்துக்குள் 4,000 மீட்டர் வரை ஊடுருவினால், அந்தச் சூழலை எதிர்கொள்வதற்கு வீரர்களைத் தயார்படுத்தும் வகையில் இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது வழக்கமான நடைபெறும் ஒரு போர் ஒத்திகையே என்றும் அவர்கள் கூறினர்.