ஊழல் வழக்கில் 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள தென் கொரிய முன்னாள் அதிபர் பார்க் கியூன்-ஹைக்கு, மேலும் 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்த நாட்டு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கியது. தென் கொரியாவின் முதல் பெண் அதிபரான அவர், தனது பதவிக் காலத்தின்போது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி ஊழலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டு, கடந்த ஏப்ரல் மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.