பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரனின் சீர்திருத்த திட்டங்களை எதிர்த்து, அண்மையில் அந்த நாட்டு எஸ்என்சிஎஃப் ரயில்வே தொழிலாளர்கள் மேற்கொண்ட வேலைநிறுத்தம் காரணமாக, சுமார் 79 கோடி யூரோ (சுமார் ரூ.6,400 கோடி) இழப்பு ஏற்பட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
37 நாள்களாக நடந்தும் தோல்வியில் முடிவடைந்த இந்த போராட்டத்தால், தினமும் 45 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.