வறுமையால் பாதிக்கப்பட்ட ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து எண்ணெய் வளம் மிக்க வளைகுடா நாடுகளில் அடைக்கலம் தேடி 160 அகதிகள் வந்து கொண்டிருந்த படகு, யேமனையொட்டிய கடல் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அந்த அகதிகளில் எத்தனை பேர் உயிருடன் மீட்கப்பட்டனர் என்பது குறித்தும், யாரேனும் உயிரிழந்தனரா என்பது குறித்தும் உடனடி தகவல் இல்லை.