இந்தோனேசியாவின் சுமத்ரா தீவிலுள்ள தோபா ஏரியில், சுமார் 80 பேருடன் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், படகிலிருந்த 60-க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகினர். திங்கள்கிழமை மாலை நேரிட்ட இந்த விபத்தில் பலியான ஒருவரது உடல் மீட்கப்பட்டது. மேலும், 18 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். எஞ்சியவர்களைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.