பாகிஸ்தானில் அடுத்த மாதம் 25-ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், கைபர் பாக்துன்கவா மாகாணம் சித்ராலில் போட்டியிடுவதற்காக முன்னாள் அதிபர் முஷாரஃப் தாக்கல் செய்த வேட்புமனுவை அதிகாரிகள் நிராகரித்தனர். அவர் மீதான தகுதி நீக்கம் குறித்த வழக்கு விசாரணைக்கு அவர் நேரில் ஆஜராகாததால், உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.