ஆங் சான் சூகிக்கு வழங்கப்பட்ட மனித உரிமை விருது பறிப்பு

மியான்மர் அரசின் தலைவர் ஆங் சான் சூகிக்கு வழங்கப்பட்டிருந்த கெளரவம் மிக்க மனித உரிமை விருதை அமெரிக்காவிலுள்ள யூதப் படுகொலை நினைவு மையம் திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளது.
ஆங் சான் சூகிக்கு வழங்கப்பட்ட மனித உரிமை விருது பறிப்பு

மியான்மர் அரசின் தலைவர் ஆங் சான் சூகிக்கு வழங்கப்பட்டிருந்த கெளரவம் மிக்க மனித உரிமை விருதை அமெரிக்காவிலுள்ள யூதப் படுகொலை நினைவு மையம் திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளது.
மியாமன்ரில் சிறுபான்மை ரோஹிங்கயா முஸ்லிம்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களைத் தடுக்கத் தவறி குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு வழங்கப்பட்ட விருது பறிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து அந்த நினைவு மையம் ஆங் சான் சூகிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
கடந்த 2016 மற்றும் 2017-ஆம் ஆண்டுகளில் ரோஹிங்கயா முஸ்லிம்களுக்கு எதிரான இன அழிப்பு கட்டவிழ்த்துவிடப்பட்டது. மனித உரிமையின் காவலராகப் போற்றப்பட்ட நீங்கள், அதற்கு எதிராக ஏதாவது செய்வீர்கள் என்று நம்பினோம்.
ஆனால், அந்த நம்பிக்கை பொய்த்துப் போனதால், தங்களுக்கு வழங்கப்பட்ட மனித உரிமைகள் விருது விலக்கிக் கொள்ளப்படுகிறது என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைதிக்கான நோபல் பரிசு பெற்றுள்ள ஆங் சான் சூ கி, மியான்மரின் வெளியுறவுத் துறை அமைச்சராகவும், பாதுகாப்புத் துறை அல்லாத நாட்டின் பிற நிர்வாகத் துறைகளின் தலைவராகவும் இருந்து வருகிறார். 
எனினும், மியான்மரில் சிறுபான்மை இனத்தவரான ரோஹிங்கயா முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைச் சம்பவங்களைத் தடுக்கவும், கண்டிக்கவும் தவறியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
ஜனநாயகத்துக்காகப் போராடியமைக்காக அவருக்கு 1991-ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com