ஆப்கானிஸ்தானில் புறக்காவல் நிலையத்தில் தாலிபான் தீவிரவாதிகள் தாக்குதல்: 10 போலீசார் பலி! 

ஆப்கானிஸ்தானின் வடக்கு தாகர் மாகாணத்தில் அமைந்துள்ள புறக்காவல் நிலையம் ஒன்றில் தாலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 போலீஸ்காரர்கள் மரணமடைந்தனர்.
ஆப்கானிஸ்தானில் புறக்காவல் நிலையத்தில் தாலிபான் தீவிரவாதிகள் தாக்குதல்: 10 போலீசார் பலி! 

காபூல்: ஆப்கானிஸ்தானின் வடக்கு தாகர் மாகாணத்தில் அமைந்துள்ள புறக்காவல் நிலையம் ஒன்றில் தாலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 போலீஸ்காரர்கள் மரணமடைந்தனர்.

இந்த தீவிரவாத தாக்குதல் குறித்து வடக்கு தாகர் மாகாண செய்தித்தொடர்பாளர் காலீ அசெய்ர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வடக்கு தாகர் மாகாணத்திலுள்ள குவாஜாஹார் மாவட்டத்தில் அமைத்துள்ள புறக்காவல் நிலையம் ஒன்றின் மீது வெள்ளியன்று அதிக எண்ணிக்கையில் தாலிபான் தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். அவர்களை எதிர்த்து தாக்குதலில் ஈடுபட்ட ஆப்கான் ராணுவத்தினருக்கு, குவாஜாஹா ர் மாவட்ட உள்ளூர் போலீசாரும் உதவினார்.

ஆயினும் இந்த பயங்கரத் தாக்குதலில் 10 உள்ளூர் போலீசார் பலியாகினர். மேலும் 9 பேர் படுகாயமடைந்தனர். ஆனால் ராணுவத்தினர் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதனிடையே இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக் கொள்வதாக தாலிபான் செய்தித் தொடர்பாளர் சபிஹூல்லா முஜஹித் அறிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com