வங்கதேசத்தை ஆளும் அவாமி லீக் கட்சியின் பிராந்தியத் தலைவர் ஏக்ரமுல் ஹக் கடந்த 2014-ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அந்தக் கட்சியைச் சேர்ந்த 39 பேருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மரண தண்டனை விதித்தது. இந்த வழக்கின் தொடக்கத்தில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட எதிர்க்கட்சியான தேசியவாதக் கட்சியின் உள்ளூர் தலைவர் உள்பட 16 பேர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.