அமெரிக்க விமான நிலையத்தில் பிரதமருக்கு நேர்ந்த கதி: கொந்தளிக்கும் பாகிஸ்தான்! 

அமெரிக்க விமான நிலையத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் காக்கன் அப்பாஸி வழக்கமான பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட விவகாரம் அந்நாட்டிற்கு அவமானத்தினை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க விமான நிலையத்தில் பிரதமருக்கு நேர்ந்த கதி: கொந்தளிக்கும் பாகிஸ்தான்! 

இஸ்லாமாபாத்: அமெரிக்க விமான நிலையத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் காக்கன் அப்பாஸி வழக்கமான பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட விவகாரம் அந்நாட்டிற்கு அவமானத்தினை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தால் பிரதமர் நவாஸ் ஷெரீப் தகுதியிழப்பு செய்யப்பட்ட பின், ஆகஸ்ட் 1 அன்று நாட்டின் 18-வது பிரதமராக ஷாஹித் காக்கன் அப்பாஸி பதவியேற்று கொண்டார்

அவர் சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள நோய்வாய்ப்பட்ட தனது சகோதரியை  சந்திக்க தனிப்பட்ட முறையில் பயணம் மேற்கொண்டுள்ளார். எபொழுது நியூயார்க்கில் உள்ள ஜே.எஃப்.கே. சர்வதேச விமான நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.  விமான நிலையத்தில் அவர் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இது தொடர்பான காட்சிகளை பாகிஸ்தானின் ஜியோ தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது. அந்த காட்சிகளில் அப்பாஸி பாதுகாப்பு சோதனைகளை முடித்துக் கொண்டு,  தனது பை மற்றும் கோட்  ஆகியவற்றை எடுத்துக்  கொண்டு நடந்து வெளியேறும் காட்சி இடம் பெற்று உள்ளது.

ஆனாலும் அவர் தானாகவே பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றினார் என்று ஜியோ நியூஸ் கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com