மலேசிய முன்னாள் பிரதமர் அன்வர் இப்ராஹிம் விடுதலை

மலேசிய முன்னாள் பிரதமர் அன்வர் இப்ராஹிம் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். 
மலேசிய முன்னாள் பிரதமர் அன்வர் இப்ராஹிம் விடுதலை

மலேசிய முன்னாள் பிரதமர் அன்வர் இப்ராஹிம் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

மலேசிய பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. 92 வயது நிரம்பிய மகாதிர் முகமது மலேசியாவின் பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். இதன்முலம், உலகிலேயே மிகவும் வயதான பிரதமர் என்ற பெருமையை அவர் பெற்றார். 

இதற்கிடையே ஊழல் மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளுக்காக சிறையில் அடைக்கப்பட்ட மலேசிய முன்னாள் பிரதமர் அன்வர் இப்ராஹிமுக்கு பொதுமன்னிப்பு வழங்கி அந்நாட்டு மன்னர் அண்மையில் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து அவர் இன்று விடுதலையானார். 

அன்வர் இப்ராஹிமின் மனைவி தற்போது மலேசியா துணை பிரதமராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com