கிம் ஜோங்குடனான சந்திப்பு: தென் கொரிய அதிபருடன் டிரம்ப் ஆலோசனை

வட கொரிய அதிபர் கிம் ஜோங்குடனான சந்திப்பு தொடர்பாக தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன்னுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை தொலைபேசியில் ஆலோசித்தார்.
கிம் ஜோங்குடனான சந்திப்பு: தென் கொரிய அதிபருடன் டிரம்ப் ஆலோசனை

வட கொரிய அதிபர் கிம் ஜோங்குடனான சந்திப்பு தொடர்பாக தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன்னுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை தொலைபேசியில் ஆலோசித்தார்.
அந்தச் சந்திப்பை ரத்து செய்யப்போவதாக வட கொரியா மிரட்டியுள்ள நிலையில் இந்த ஆலோசனை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மூன் ஜேன்-இன் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அதிபர் மூன் ஜேனை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொலைபேசியில் ஞாயிற்றுக்கிழமை தொடர்பு கொண்டு பேசினார்.
அதிபர்கள் டிரம்ப்-கிம் இடையிலான பேச்சுவார்த்தை விவகாரத்தில், வட கொரியா அண்மைக் காலமாக நடந்து கொள்ளும் விதம் குறித்து இருவரும் விவாதித்தனர்.
சிங்கப்பூரில் நடைபெறவிருக்கும் அந்தச் சந்திப்பு வெற்றிகரமாக நடைபெறுவதற்காக இரு தலைவர்களும் இணைந்து செயல்பட உறுதிபூண்டனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டின் இறுதிவரை சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ஏவுகணைச் சோதனைகளையும், அணு குண்டு சோதனைகளையும் தொடர்ந்து வடகொரியா நடத்தி வந்தது.
இதற்குப் பதிலடியாக, ஐ.நா. அமைப்பும், அமெரிக்காவும், வட கொரியா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தன. இதனால், வட கொரியாவுக்கும், அமெரிக்க-தென் கொரிய நாடுகளுக்கும் இடையே கடும் பதற்றம் நிலவி வந்தது.
இந்தச் சூழலில், தென் கொரியாவில் மார்ச் மாதம் நடைபெற்ற ஒலிம்பிக் துவக்க விழாவுக்கு தனது தங்கை கிம் யோ-ஜோங்கை வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் அனுப்பி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து இரு கொரிய நாடுகளுக்கும் இடையே பதற்றம் தணிந்து இணக்கமான சூழல் ஏற்பட்ட நிலையில், கிம் ஜோங்-உன், தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் ஆகியோரிடையிலான வரலாற்றுச் சிறப்பு மிக்கச் சந்திப்பு கடந்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் வட கொரிய அதிபர் கிம் ஜோங்கின் சந்திப்பு சிங்கப்பூரில் ஜூன் 12-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், லிபியாவில் நடந்ததைப் போல் வட கொரியா அனைத்து அணு ஆயுதங்களையும் ஒப்படைத்தால் மட்டுமே அந்த நாட்டின் மீதான பொருளாதாரத் தடை நீக்கப்படும் என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்ட்டன் கூறியதாக தகவல்கள் வெளியாகின.
இதனால் அதிருப்தியடைந்த வட கொரியா, அணு ஆயுத ஒழிப்பு விவகாரத்தில் அமெரிக்கா தன்னிச்சையாக நடந்து கொண்டால் டிரம்ப்-கிம் இடையிலான பேச்சுவர்த்தை ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com