பாகிஸ்தானின் தகவல் தொலைதொடர்பு அமைச்சகம் வியாழக்கிழமை ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிவிப்பில்,
"ரம்ஜானுக்கு 2 நாட்களுக்கு முன்பு முதல் விடுமுறைக்கு 2 வாரங்கள் பின்பு வரை இந்திய மற்றும் வெளிநாட்டு திரைப்படங்களை திரையிடுவதற்கு தடை விதிக்கப்படவுள்ளது. இது உள்ளூர் திரைத்துறையை பாகிஸ்தானில் ஊக்கமளித்து புதுப்பிப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை.
அதனால், வெளிநாட்டு திரைப்பட விநியோகஸ்தர்கள் இந்திய திரைப்படங்களை மேற்கண்ட நாட்களில் திரையரங்குகளில் திரையிடக் கூடாது" என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, பாகிஸ்தானின் தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர், நடிகையர் இந்தியா மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களுடனான கடும் போட்டியால் தங்களது திரைப்படங்களுக்கு குறைவான திரையரங்குகளே கிடைக்கிறது என்று புகார் அளித்திருந்தனர்.